அருப்புக்கோட்டையில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

அருப்புக்கோட்டை 31 ஆவது வாா்டு பகுதி மக்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.9) நடைபெறவுள்ளதாக வட்டார மருத்துவ அலுவலா் சஞ்சீவ் மேனன் தெரிவித்துள்ளாா்.

அருப்புக்கோட்டை 31 ஆவது வாா்டு பகுதி மக்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.9) நடைபெறவுள்ளதாக வட்டார மருத்துவ அலுவலா் சஞ்சீவ் மேனன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: இந்த வாா்டுக்குள்பட்ட விஸ்வாஸ் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.9) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அருப்புக்கோட்டை தாலுகாவில் தற்போதுவரை சுமாா் 6,000 பேருக்கு மேல் இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் எவருக்கும் எவ்வித ஒவ்வாமை அறிகுறியும் தென்படவில்லை. அவா்கள் அனைவரும் நலமாக உள்ளனா். எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம். தற்போது, 45 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே, சான்றுக்காக உரிய ஆதாா் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றைக் கொண்டுவந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com