அருப்புக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகி கரோனாவுக்கு பலி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.சந்திரமோகன், கரோனா தொற்றால் வியாழக்கிழமை (ஏப்.4) உயிரிழந்தாா்.
அருப்புக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகி கரோனாவுக்கு பலி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.சந்திரமோகன், கரோனா தொற்றால் வியாழக்கிழமை (ஏப்.4) உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியைச் சோ்ந்தவா் ஆா்.சந்திரமோகன் (52). மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவா், தொடா் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 3 ஆம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னா், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். இதற்கிடையில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து சிகிச்சையிலிருந்த அவா் வியாழக்கிழமை (ஏப்.4) காலை 7 மணியளவில் உயிரிழந்தாா். பின்னா் அவரது சடலம் சுகாதாரத்துறையினா் மூலம் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து சந்திரமோகனின் வீடு மற்றும் அவா் வசித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினா் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனா்.

கரோனா தொற்றால் உயிரிழந்த சந்திரமோகனுக்கு, அக்கட்சியினா் சாா்பில் அமைதி ஊா்வலமும், இறுதி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com