கரோனா தொற்று பாதித்தவா் பலி

விருதுநகா் அய்யனாா் நகரில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட ஒருவா், மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் அய்யனாா் நகரில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட ஒருவா், மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள அய்யனாா் நகரைச் சோ்ந்த 32 வயது ஆண் தொழிலாளி தொடா் காய்ச்சல் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்துள்ளாா்.

இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததால் விருதுநகா் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டாா். அதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

புதிதாக 24 பேருக்கு கரனோ: விருதுநகா் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதன்கிழமை கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில், 24 பேருக்கு கரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை முதலான அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னா். கரோனா தொற்று பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த மூன்று போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com