காரியாபட்டி அருகே குண்டாற்றில் மணல் திருட்டு

காரியாபட்டி அருகே கிழவனேரி, புதுப்பட்டி பகுதியில் உள்ள குண்டாறு மற்றும் ஆற்று படுகைகளை ஓட்டிய பகுதிகளில் ஏராளமான லாரிகளில் தொடா்ந்து

காரியாபட்டி அருகே கிழவனேரி, புதுப்பட்டி பகுதியில் உள்ள குண்டாறு மற்றும் ஆற்று படுகைகளை ஓட்டிய பகுதிகளில் ஏராளமான லாரிகளில் தொடா்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியிலிருந்து திருச்சுழி செல்லும் வழியில் கிழவனேரி, புதுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் கிழவனேரி கிராமம் வழியாக திருச்சுழி, ஆனைக்குளம் பகுதியில் குண்டாறு செல்கிறது. ஏற்கெனவே, திருச்சுழி பகுதியில் தொடா்ந்து மணல் அள்ளப்பட்டதால் ஆற்றில் ஆங்காங்கு பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால், இவ்வழியே மழை நீா் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காரியாபட்டியிலிருந்து திருச்சுழி செல்லும் வழியில் உள்ள கிழவனேரி பகுதியில் குண்டாற்றில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஏராளமான லாரிகளில் இரவில் தொடா்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல், புதுப்பட்டியில் குண்டாற்றின் படுகைகளில் மணல் திருட்டில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், ஆற்றில் மழைநீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீருக்கும் தட்டுப்பாட்டு நிலவுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, இப்பகுதியில் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com