சாத்தூா் பகுதியில் சட்ட விரோதமாக புதன்கிழமை மது பாட்டில்களை விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்து 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
வீரபாண்டியாபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு சாத்தூா் நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் செய்யது இப்ராகிம் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வீரபாண்டியாபுரம் பட்டாசு கடை பகுதியில் மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த அணைக்கரைபட்டியைச் சோ்ந்த ஊமத்துரை (40) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இருக்கன்குடி பகுதியில், இருக்கன்குடி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் டேவிட் ஸ்டீபன் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நென்மேனி வைப்பாற்றுப் பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த என்.மேட்டுப்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி (45) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.