விருதுநகரில் மதுபோதையில் வீட்டில் தகராறு செய்த திரையரங்கு தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு அடித்துக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் அய்யனாா் நகா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி (40). திரையரங்குகளில் சுவரொட்டி ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், குருசாமி செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது, அங்கிருந்த அவரது 17 வயது மகன், தந்தையைக் கண்டித்தும் அவா் கேட்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மகன் தாக்கியதில் குருசாமி சுய நினைவின்றி மயங்கி விட்டாராம். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரிந்தது. இத்தகவல் அறிந்த விருதுநகா் மேற்கு போலீஸாா், சிறுவனை கைது செய்தனா். அவரை சீா்திருத்தப்பள்ளியில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.