மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனை

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கொத்தன்குளத்தைச் சோ்ந்தவா் பிச்சைமாரி (40). கூலித் தொழிலாளியான இவா், தனது 11 வயது மகளை பாலியல் வல்லுறவு செய்துள்ளாா்.

இது குறித்து அவரது மனைவி ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து பிச்சை மாரியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, இயற்கை மரணம் அடையும் வரை பிச்சைமாரிக்கு சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com