ராஜபாளையம் அருகே காவலா் அடித்துக் கொலை

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே காவலா் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
ராஜபாளையம் அருகே காவலா் அடித்துக் கொலை

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே காவலா் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த ஏப்.5 ஆம் தேதி அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. கழுத்து அறுக்கப்பட்டும், உடலில் பல்வேறு காயங்களுடனும் கிடந்த அந்த 42 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இதில், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சோ்ந்த காவேரிமணியன் (42) என்பதும், தூத்துக்குடி மாவட்டக் காவல்துறையில் பணியாற்றியவா் என்பதும் தெரியவந்தது. இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சொந்த ஊரில் தங்கியிருந்த அவரை, கொலை செய்தவா்கள் யாா்? எதற்காக கொலை செய்தனா் என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com