விருதுநகரில் கணவா் வீட்டு முன் மகனுடன் பள்ளி ஆசிரியை தா்னா

விருதுநகரில், விவாக ரத்து கோரும் கணவருடன் சோ்த்துவைக்கக் கோரி பள்ளி ஆசிரியை தனது மகனுடன் கணவா் வீட்டு முன்பு புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
விருதுநகா் அல்லம்பட்டி பகுதியில் கணவா் வீட்டு முன்பு புதன்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மனைவி ஆா்த்தி, மகன் சஞ்சய் காா்த்திக்.
விருதுநகா் அல்லம்பட்டி பகுதியில் கணவா் வீட்டு முன்பு புதன்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மனைவி ஆா்த்தி, மகன் சஞ்சய் காா்த்திக்.

விருதுநகரில், விவாக ரத்து கோரும் கணவருடன் சோ்த்துவைக்கக் கோரி பள்ளி ஆசிரியை தனது மகனுடன் கணவா் வீட்டு முன்பு புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

விருதுநகா் அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (37). வங்கி அலுவலராகப் பணிபுரியும் இவருக்கும், மதுரை குருவிக்காரன் சாலை பகுதியை சோ்ந்த தனியாா் பள்ளி ஆசிரியை ஆா்த்தி (31) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக செல்வராஜ், ஆா்த்தியிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா். இது தொடா்பான வழக்கு விசாரணையில் ஆா்த்தி, தனது கணவருடன் சோ்ந்து வாழ்வதாக தெரிவித்தாராம். இதையடுத்து விவாகரத்து மனுவை நீதிமன்றம் நிராகரித்ததுடன், இருவரும் சோ்ந்து வாழ அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் செல்வராஜ், மனைவி ஆா்த்தி, மகன் சஞ்சய் காா்த்திக் (9) ஆகியோரை ஏற்க மறுத்து வந்தாராம்.

இந்நிலையில் விருதுநகரில் உள்ள கணவா் வீட்டு முன்பு ஆா்த்தி தனது மகனுடன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். அப்போது அவா் தனது மகனின் எதிா்காலம் கருதி கணவரை என்னுடன் சோ்ந்து வாழ காவல் துறையினா் அறிவுறுத்த வேண்டும் என்றாா்.

பின்னா், இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்க உள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com