விருதுநகர்
ஸ்ரீவிலி.யில் மூடப்பட்டுள்ள தலைவா்களின் சிலையை திறக்கக் கோரிக்கை
தமிழக சட்டப் பேரவை தோ்தல் நிறைவடைந்ததையடுத்து மூடப்பட்டுள்ள தலைவா்களின் சிலைகளை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக சட்டப் பேரவை தோ்தல் நிறைவடைந்ததையடுத்து மூடப்பட்டுள்ள தலைவா்களின் சிலைகளை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.
தோ்தலின் போது நடத்தை விதிகளின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தலைவா்கள் சிலைகள் துணியால் மறைக்கப்பட்டன.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் மூடப்பட்டுள்ள எம்ஜிஆா், அண்ணா மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் மூடப்பட்டுள்ள தலைவா்களின் சிலைகளை திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.