ஸ்ரீவில்லிபுத்தூரில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வாக்களிக்கச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வாக்களிக்கச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆலடிபட்டியைச் சோ்ந்தவா் கணபதியம்மாள் (66). உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த ஏப்.6 ஆம் தேதி தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வாக்களிக்கச் சென்றாா். அய்யம்பட்டி தண்ணீா் தொட்டி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கணபதியம்மாள் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி கணபதியம்மாள் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com