பாறைக்குளம் வெள்லியம்பலநாதர் கோயிலில் பங்குனி மாத பிரதோச வழிபாடு 

திருச்சுழி அருகே பாறைக்குளம் அருள்மிகு வெள்லியம்பலநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை பங்குனி மாத பிரதோச வழிபாடு நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை பிரதோச வழிபாட்டையடுத்து முழு அலங்காரத்தில் பக்தர்களுக்காட்சி தந்த பாறைக்குளம் அருள்மிகு வெள்ளியம்பலநாதர்.
வெள்ளிக்கிழமை பிரதோச வழிபாட்டையடுத்து முழு அலங்காரத்தில் பக்தர்களுக்காட்சி தந்த பாறைக்குளம் அருள்மிகு வெள்ளியம்பலநாதர்.

திருச்சுழி அருகே பாறைக்குளம் அருள்மிகு வெள்லியம்பலநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை பங்குனி மாத பிரதோச வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், பாறைக்குளம் அருள்மிகு  வெள்ளியம்பலநாதர் கோயிலில் பங்குனி மாத பிரதோச நாளையொட்டி வெள்ளிக்கிழமை மாலை அருள்மிகு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைப்பொருட்களால் அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன. 

அதையடுத்து கருவறையிலுள்ள லிங்கத் திருமேனியாகிய வெள்ளியம்பலநாதருக்கு பால், பன்னீர், வில்வ இலை, வாழை, பேரீச்சம்பழங்கள், தேன் கலந்க கலவையாலும், குங்குமம் கலந்த நீர், விபூதி கலந்த நீர், தயிர், இளநீர், கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்த நீர், கிழங்கு மஞ்சள்தூள் கலந்த நீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப்பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. 

பின்னர் நடை சாற்றப்பட்டு லிங்கத்திருமேனிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்தபின், வெள்ளியம்பலநாதர் பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள்பாலித்தார். முன்னதாக நந்தீஸ்வரர் மற்றும் வெள்ளியம்பலநாதருக்கு அபிஷேகப் பொருட்கள், மலர்கள்,மாலைகள் ஆகியன படைத்து மகாமிருத்யஞ்சய மந்திரம், நமச்சிவாய மந்திரங்கள் சொல்லி பக்தர்கள் வழிபட்டனர். 

தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் குங்குமம், விபூதி, பஞ்சாமிர்த பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிவனடியாரும், கோயில் பூசாரியுமான ராஜபாண்டி செய்திருந்தார்.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நேரில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com