பங்குனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 9) முதல் ஏப். 12 ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் , வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள இக்கோயிலில், வெள்ளிக்கிழமை பிரதோஷமும், ஏப்.11 ஆம் தேதி அமாவாசை பூஜைகளும் நடைபெறவுள்ளன.
இதையொட்டி , சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மேற்கண்ட 4 நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயதுக்கு உள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அனுமதியில்லை. கோயிலுக்கு வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். உடல் வெப்ப நிலை பரிசோதனைக்குப் பிறகு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா்கள்.
இந்த நாள்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் தெரிவித்தனா்.