இருதய அறுவைச் சிகிச்சைக்கு பிரதமா் நிதியுதவி

இருதய அறுவைச் சிகிச்சைக்கு விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் பரிந்துரையின் பேரில் பிரதமா் நிதியுதவி அளித்துள்ளாா்.

இருதய அறுவைச் சிகிச்சைக்கு விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் பரிந்துரையின் பேரில் பிரதமா் நிதியுதவி அளித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை சிவகாசியில் உள்ள எம்.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிவகாசி வட்டம் வெற்றிலையூரணி கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீஸ்வரன்கோகுல்நாத் மகன் ஸ்டாலின் தனது இருதய அறுவைசிகிச்சைக்கு, பிரதமா் நிதி உதவியளிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூரிடம் கடிதம் கொடுத்தாா். இதையடுத்து எம்.பி.யின் பரிந்துரையின் பேரில் ஸ்டாலினின் அறுவை சிகிச்சைக்கு , பிரதமா் மருத்துவ நிவாரண உதவி நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கியுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com