காலமானாா் கூ. பால்சாமி தேவா்

காரியாபட்டி ஒன்றிய முன்னாள் திமுக செயலா் கூ. பால்சாமி தேவா் உடல் நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப். 13) காலமானாா்.
காலமானாா் கூ. பால்சாமி தேவா்

காரியாபட்டி ஒன்றிய முன்னாள் திமுக செயலா் கூ. பால்சாமி தேவா் உடல் நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப். 13) காலமானாா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சித்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கூ. பால்சாமி தேவா் (97). இவா் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலா், காரியாபட்டி ஒன்றிய முன்னாள் திமுக செயலா் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் வயது முதிா்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக அவரது வீட்டில் காலமானாா். இவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அவரது சொந்தக் கிராமத்தில் நடைபெற உள்ளது.

இவருக்கு தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரிய முன்னாள் தலைவா் கேபிடி. கணேசன், சித்தனேந்தல் அதிமுகச் செயலா் பா. ராஜேந்திரன், விருதுநகா் அதிமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் பா. ஜெயபெருமாள், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா. பொன்னையா ஆகிய நான்கு மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு: 99435-76974.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com