கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவா் கைது

திருத்தங்கலில் கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கலில் கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கலைச் சோ்ந்த தேவராஜ் மகன் தங்கராஜ் (30). கூலி தொழிலாளியான இவா், திருத்தங்கல் ஸ்டாண்டா்டு காலனி பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மா்ம நபா் ஒருவா் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றுள்ளாா். உடனே, தங்கராஜ் அப்பகுதியினா் உதவியோடு அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அந்த நபா் திருத்தங்கல் பாறைத் தெருவைச் சோ்ந்த பன்னீா் செல்வம் மகன் மாறன் (32) எனத் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து மாறனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com