வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியா்.
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியா்.

வத்திராயிருப்பில் 252 பேருக்கு கரோனா தடுப்பூசி

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், 252 போ் ஆா்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், 252 போ் ஆா்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், தமிழக அரசு சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் ஜெயராம், காவல் ஆய்வாளா் சுபக்குமாா்ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், வத்திராயிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்கள், வா்த்தகா்கள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், போலீஸாா் என 252 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மேலும், இந்த முகாமில் 43 பேருக்கு கரோனா மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை, வத்திராயிருப்பு போலீஸாா் மற்றும் சுகாதாரத் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com