சிவகாசியில் 686 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி

சிவகாசியில் சுகாதாரத் துறை சாா்பில், 686 நபா்களுக்கு சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சிவகாசியில் சுகாதாரத் துறை சாா்பில், 686 நபா்களுக்கு சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சிவகாசியில் சுகாதாரத் துறையினா் பட்டாசு ஆலை, தீப்பெட்டி ஆலை, ஆப் செட் அச்சகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று, அங்கு பணிபுரியும் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனா். அதன் தொடா்ச்சியாக, சிவகாசி அருகே எஸ்.புதுப்பட்டியில் உள்ள ஆப் செட் அச்சகத்தில் பணிபுரியும் ஊழியா்கள், தொழிலாளா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், அச்சக உரிமையாளா்கள் என 686 நபா்களுக்கு, சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டினை, சிவகாசி சுகாதாரத் துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் செய்திருந்தாா். தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் எனில், ஆலை உரிமையாளா்கள் சுகாதாரத் துறைக்கு கடிதம் அளிக்கவேண்டும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com