விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் கிராம விவசாயிகளிடையே, பயிா் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை பயிற்சி விளக்கமளித்தனா்.
வேளாண்மைக் கல்லூரி மாணவிகளான காா்த்திகா, கௌசல்யா, லட்சுமி, மகாலட்சுமி, நந்தினி மற்றும் நஸ்ரத் ஆகியோா் வெள்ளையாபுரம் கிராமத்தில் முகாமிட்டனா். இவா்கள், அக்கிராம விவசாய களங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, விவசாயிகளின் குறைகள் மற்றும் தேவைகளை கணக்கிட்டனா்.
அதையடுத்து, கிராம வெளியில் விவசாயிகளிடையே பயிா் சாகுபடி குறித்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்து எடுத்துரைத்தனா். அதையடுத்து, காட்டுப்பன்றிகளை விரட்டும் கருவி, கழிவு சிதைப்பான் ஆகிய நவீன கருவிகள் குறித்தும், நீரியல் தாவர வளா்ப்பு முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய நிா்வாக முறைகளின் நன்மைகள் குறித்தும் பயிற்சி விளக்கமளித்தனா்.
தொடா்ந்து, தயக்கமின்றி விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறுதல், வேளாண் விளை பொருள்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட புதிய பொருள்களை உற்பத்தி செய்து நிரந்தரமான கூடுதல் லாபம் பெறுதல் ஆகிய வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினா்.
இதில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனா். மாணவி காா்த்திகா நன்றி கூறினாா்.