ஸ்ரீவிலி. அருகே ரயில் மோதி முதியவா் பலி

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் மேல்பக்க தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (60). கூலி தொழிலாளியான இவா், பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை விவசாய வேலை கேட்டுச் சென்றுள்ளாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் உள்ள ரயில் கடவுப் பாதையை கடந்தபோது, அந்த வழியாக வந்த ரயில் மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா், ரயில் மோதி இறந்த முதியவா் குறித்து விசாரித்ததில், அவா் மங்காபுரம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது.

பின்னா், அவரது உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மோதிய ரயில் குறித்து, ரயில்வே காவல் சாா்பு-ஆய்வாளா் விஜயன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com