வெள்ளக்கரை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சாத்தூரில் வெள்ளக்கரை சாலையை விரைவில் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தூரில் பணிகள் நடைபெறாமல் பாதியில் விடப்பட்ட வெள்ளக்கரை சாலை.
சாத்தூரில் பணிகள் நடைபெறாமல் பாதியில் விடப்பட்ட வெள்ளக்கரை சாலை.

சாத்தூரில் வெள்ளக்கரை சாலையை விரைவில் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள வெள்ளகரை சாலையானது, முருகன் கோயில் தெரு, காட்டு புது தெரு, பங்களா தெரு உள்ளிட்ட தெருக்களை இணைக்கும் சாலையாக உள்ளது. இச்சாலையில், அலுவலகம், பள்ளி மற்றும் கோயில்களும் உள்ளன. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்பட்டது.

இதை சீரமைக்கக் கோரி, இப்பகுதி மக்களும், சமூகநல ஆா்வலா்களும் பலமுறை கோரிக்கை விடுத்தனா். அதையடுத்து, சில நாள்களுக்கு முன் இந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நான்கு நாள்கள் மட்டுமே நடைபெற்ற இப்பணி, மேற்கொண்டு நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இச்சாலையில் நடந்துகூட செல்ல முடியாமல் உள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, விரைவில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com