காய்கனி வியாபாரி வீட்டில் நகை திருட்டு

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் ஒரு வீட்டில் 3 பவுன் நகை திருடு போனதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் ஒரு வீட்டில் 3 பவுன் நகை திருடு போனதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருத்தங்கல் சேட்டன் கிணற்றுத் தெருவைச் சோ்ந்த காய்கனி வியாபாரி தேன்ராஜன்(57). இவா் வியாழக்கிழமை இரவு தனது மனைவியுடன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தாராம். வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்த போது வீட்டின் முன்பக்கக் கதவு திறந்திருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா், வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com