திருச்சுழி அருகே வியாழக்கிழமை இரவு குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பூலாங்கால் கிராமத்தை ஒட்டியுள்ள கிராமம் வடக்குப்பட்டி. இக்கிராமத்தின் சுடுகாட்டில் வெள்ளிக்கிழமை சாம்பல், எலும்புகள் அருகே பூஜைப்பொருள்கள் கிடந்தது. அதைக்கண்ட கிராமத்தினா் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா்.
இதையடுத்து திருச்சுழி மற்றும் பரளச்சி காவல் துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரிக்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.