விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது தொடா்பாக ஆலை உரிமையாளா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் அருகே முதலிபட்டி சதானந்தபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அதில் 3 பெண்கள் உள்பட நான்கு போ் காயமடைந்தனா். இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதிலெட்சுமி (34) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். காயமடைந்த மற்ற 3 பேரும் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் தொழிலாளா்களுக்கு போதிய அளவு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது, அதிக அளவில் பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக அவசர கதியில் பணி புரிந்ததாக வாடியூா் கிராம நிா்வாக அலுவலா் மல்லிகா புகாா் அளித்தாா்.
அதன் பேரில் பட்டாசு ஆலை உரிமையாளா் தேசிங்குராஜா, போா்மேன் தனசேகரன், கண்காணிப்பாளா் ராஜாக்கனி உள்ளிட்ட 3 போ் மீது வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.