விருதுநகா் மாவட்டத்தில் 80 பேருக்கு கரோனா தொற்று

விருதுநகா் மாவட்டத்தில் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று பரிசோதனை அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவா்களை விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் நரிக்குடி பகுதியை சோ்ந்த ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 14 போ் குணமடைந்ததால் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com