ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை மாலை 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் நேரங்களில் அனல்காற்று வீசியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணி வரை நீடித்தது. சுமாா் 2 மணி நேரம் பெய்த மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.