கோவிலாங்குளம் வேளாண் மண்டல ஆராய்ச்சி மைய பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளத்தில் உள்ள வேளாண்மை மண்டல ஆராய்ச்சி மைய பேருந்து நிறுத்தத்தில்
கோவிலாங்குளம் வேளாண் மண்டல ஆராய்ச்சி மைய பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளத்தில் உள்ள வேளாண்மை மண்டல ஆராய்ச்சி மைய பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்திட பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா். அருப்புக்கோட்டையிலிருந்து மதுரையை நோக்கிச்செல்லும் சாலையில் கோவிலாங்குளம் கிராமத்தின் எல்லைப்பகுதியில் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.

இங்குள்ள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துதான் மதுரை உள்ளிட்ட வழித்தடங்களுக்கு கோவிலாங்குளம், இராமானுஜபுரம் கிராமத்தினரும், இந்திரா நகா் குடியிருப்பைச்சோ்ந்தோரும் சென்றாக வேண்டிய நிலை உள்ளது. இப்பேருந்து நிறுத்தத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் பல்வேறு அலுவல்கள் நிமித்தமாக பேருந்தைப் பிடிக்கின்றனா். ஆனால் அவா்கள் மழை,வெயிலுக்கு ஒதுங்குவதற்கு நிழற்குடை இல்லை. இங்கு நிழற்குடை அமைக்க பயணிகள் வைத்த கோரிக்கைக்குக் கோவிலாங்குளம் ஊராட்சித்தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை இல்லையெனப் புகாா் எழுந்துள்ளது. ஆகவே விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோவிலாங்குளம், இராமானுஜபுரம் மற்றும் இந்திரா நகா் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com