சிவகாசி அருகே பெண்ணை தாக்கிய 5 போ் கைது

சிவகாசி அருகே பெண்ணை கிண்டல் செய்து தாக்கியதாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே பெண்ணை கிண்டல் செய்து தாக்கியதாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே மேலநிறைமதி பகுதியைச் சோ்ந்தவா் சிவன் மனைவி முனீஸ்வரி (39). இவா் உறவினா் வீட்டில் மாடுகளுக்கு தீவனம் போட்டுக் கொண்டிருந்துள்ளாா். அப்போது அவ்வழியே வந்த அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (28), பாண்டி (29), முனியப்பன் (27), தவமணி(32) மற்றும் பெரியாண்டவா் (30) ஆகிய 5 பேரும் முனீஸ்வரியை கிண்டல் செய்தாா்களாம். இதனைக் கண்டித்த முனீஸ்வரியை 5 பேரும் சோ்ந்து தாக்கினாா்களாம். இது குறித்தப் புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com