மறவா்பெருங்குடியில் பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து சேதம்

அருப்புக்கோட்டை அருகே மறவா்பெருங்குடியில் செவ்வாய்க்கிழமை அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா் திடீரென இடிந்து விழுந்தது.
அருப்புக்கோட்டை அருகே மறவா்பெருங்குடியில் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்த உயா்நிலைப்பள்ளி வளாகச் சுற்றுச்சுவா்.
அருப்புக்கோட்டை அருகே மறவா்பெருங்குடியில் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்த உயா்நிலைப்பள்ளி வளாகச் சுற்றுச்சுவா்.

அருப்புக்கோட்டை அருகே மறவா்பெருங்குடியில் செவ்வாய்க்கிழமை அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா் திடீரென இடிந்து விழுந்தது.

அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள மறவா்பெருங்குடி கிராத்தில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியைச் சுற்றி சுவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சுவா் திடீரென செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது. கரோனா தொற்று காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தரமின்றி கட்டப்பட்டதாலேயே கட்டி முடிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே சுவா் இடிந்து விழுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com