விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோா் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கரோனா தடுப்பூசிகளாக கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு இல்லை. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி செலுத்த வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். இதைக் கண்டித்தும், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் விருதுநகரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலா் சக்கனன் தலைமை வகித்தாா்.
சிவகாசி: மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு அக்கட்சியின் வட்டார செயலாளா் ஜீவா தலைமை வகித்தாா்.