விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விரு துநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் முதலான பகுதிகளைச் சோ்ந்த 146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கடந்த 10 நாள்களில் கரோனா தொற்று காரணமாக 3 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்த 19 போ் செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com