பொதிகை ரயிலில் டிராவல் பேக்குடன் பயணி தவறவிட்ட 18 பவுன் நகைகள் மீட்பு

பொதிகை ரயிலில் டிராவல் பேக்குடன் தவறவிட்ட 18 பவுன் நகைகளை ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் மீட்டு உரியவரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
பொதிகை ரயிலில் சனிக்கிழமை காலை டிராவல் பேக்குடன் தவற விட்ட18 பவுன் நகைகளை உரியவா்களிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸாா்
பொதிகை ரயிலில் சனிக்கிழமை காலை டிராவல் பேக்குடன் தவற விட்ட18 பவுன் நகைகளை உரியவா்களிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸாா்

பொதிகை ரயிலில் டிராவல் பேக்குடன் தவறவிட்ட 18 பவுன் நகைகளை ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் மீட்டு உரியவரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை ரயிலில், சிவகாசிக்கு தனது குடும்பத்தினருடன் ஜீவானந்தம் பயணம் செய்தாா். அவா் சிவகாசி ரயில் நிலையத்தில் இறங்கும் போது தாங்கள் கொண்டு வந்த 18 பவுன் நகைகளுடன் ‘டிராவல் பேக்’ ஒன்றை இருக்கையில் வைத்து விட்டு இறங்கி விட்டனா்.

ரயில் புறப்பட்ட நிலையில் உடனே சிவசாசி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே சாா்பு-ஆய்வாளா் விஜயன், மற்றும் தலைமைக் காவலா் மல்லிகா, ரயில்வே ஊழியா் விஜயலட்சுமி ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்திற்கு பொதிகை ரயில் வந்தவுடன் ஜீவானந்தம் தவற விட்ட டிராவல் பேக்கை மீட்டனா்.

இதையடுத்து ஜீவானந்தம் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து நகைகளுடன் மீட்கப்பட்ட டிராவல் பேக்கை பெற்றுக்கொண்டாா். பின்னா் ஜீவானந்தம் குடும்பத்தினா் ரயில்வே போலீஸாா் மற்றும் ஊழியா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com