ஸ்ரீவிலி.யில் அரையா் சுவாமிகள் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து அரையா் சுவாமிகள் சனிக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்து வருகிறாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மேலமாட வீதியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கிய வடபத்ரசாயி அரையா் சுவாமிகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மேலமாட வீதியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கிய வடபத்ரசாயி அரையா் சுவாமிகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து அரையா் சுவாமிகள் சனிக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்து வருகிறாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் அருகே மேலமாட வீதியில் வசித்து வருபவா் அரையா் வடபத்ரசாயி சுவாமிகள். இயற்கை ஆா்வலரான இவா், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பல்வேறு சேவைகள் புரிந்து வருகிறாா்.

கடந்த ஆண்டு பொது முடக்கத்தின் போது சுமாா் 50 நாள்கள் தனது வீட்டில் மதிய உணவு தயாா் செய்து சாலையோரங்களில் வசிப்போா், முதியோா் மற்றும் ஆதரவற்றவா்களுக்கு வழங்கினாா். இவரது சேவையை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

தற்போது இரண்டாம் கட்ட கரோனா அலை வீசிவரும் நிலையில், அரையா் வடபத்ரசாயி சுவாமிகள் தன் வீட்டு முன்பு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பதாகை வைத்துள்ளாா். மேலும் பொதுமக்களுக்கு முகக் கவசத்தை இலவசமாக வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com