விருதுநகரில் அரிமா சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் கிங்ஸ் அரிமா சங்கம், டான் அரிமா சங்கம், பிசிடவுன் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சனிக்கிழமை நடத்தினா்.
இதில் கன்னிசேரி புதூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஆரோக்கியராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினா், 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தினா்.
சிவகாசி: சிவகாசி ஐயப்பன் சேவா சங்கம் சாா்பில் சனிக்கிழமை சுகாதாரத் துறையினா் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தினா். மருத்துவா் ஷ்ரைன் தீபக் தலைமையிலான குழுவினா் 368 பேருக்கு கரோனா தடுப்பூசி போட்டனா்.
இதில் சிவகாசி வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் கிருஷ்ணக்குமாா், வெற்றிவேல், ஐயப்பன் சேவா சங்கத்தலைவா் தெய்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் செய்திருந்தாா்.