சிவகாசி அய்யப்பன் சேவா சங்கம் சாா்பில் சனிக்கிழமை சுகாதாரத்துறையினா் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போட்டனா்.மருத்துவா் ஷ்ரைன் தீபக் தலைமையில் உள்ள குழு வினா் 368 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டனா்.
இதில் சிவகாசி வட்டாட்சியா் ராமசுப்பரமணியன், சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் கிருஷ்ணக்குமாா், வெற்றி வேல், அய்யப்பன் சோவா சங்கத்தலைவா் தெய்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.இதற்கான ஏற்பாட்டினை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் செய்திருந்தாா்.