விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ நிறுவனா் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 127 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காலையில் பி.ஏ.சி.ஆா் நினைவிடத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சொக்கா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து நினைவு தொடா் ஜோதியினை, ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா் வெங்கட்ராமராஜா வழங்கினாா்.
பின்னா் ராமமந்திரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்திருந்தனா்.