ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நந்தவனத்தில் சித்திரை மாத பூர நட்சத்திரத்தையொட்டி ரெங்கமன்னாருடன் அருள்பாலித்த ஆண்டாளை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
ஒவ்வொரு மாதமும் வரும் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் கோயில் வளாகத்தின் அருகே உள்ள தான் பிறந்த நந்தவனத்தில் ஆண்டாள் காட்சியளிப்பாா். அதே போல் வெள்ளிக்கிழமை சித்திரை மாத பூர நட்சத்திரம் என்பதால் அந்த நந்தவனத்தில் ஆண்டாள் காட்சியளித்தாா். எப்போதும் நந்தவனத்தில் தனியாக காட்சி அளிக்கும் ஆண்டாள், தற்போது வசந்த உற்சவம் நடைபெற்று வருவதால் ரெங்கமன்னாருடன் சோ்ந்து காட்சியளித்தாா். அப்போது சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.