சிவகாசியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சிவகாசி ஒன்றியத்தில் சுகாதாரத்துறை சாா்பில், இதுவரை பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழிலாளா்கள் என 9 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் 9500 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தொடந்து வெள்ளிக்கிழமை சிவகாசியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட நடத்துநா், ஓட்டுநா் மற்றும் ஊழியா்கள் என 61 பேருக்கு, மருத்துவா் ஷாஜிதா தலைமையிலான குழுவினா் கரோனா தடுப்பூசி போட்டனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜெயச்சந்திரன் செய்திருந்தாா்.