விருதுநகர்
ராஜபாளையத்தில் முதியோா், ஆதரவற்றோா்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கல்
ராஜபாளையத்தில் பொது மக்களுக்கு இலவச உணவு பொட்டலங்களை மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றத்தினா் வழங்கினர்.
ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் நகா் பகுதிகளில் உள்ள பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, மகப்பேறு மருத்துவமனை மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் காலை, மதியம், இரவு என மொத்தம் 3,000 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.