இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்ப்டடன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய இந்து மக்கள் கட்சியினா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய இந்து மக்கள் கட்சியினா்.

கரோனா பரவலைத் தடுக்க முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்ப்டடன.

முழு பொது முடக்கத்தால் உணவு விடுதிகள், கடைகள் அடைக்கப்பட்டதோடு பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியமாரியம்மன் கோயில், ஆண்டாள் கோயில், மடவாா் வளாகம், ராமகிருஷ்ணபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றோா் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்து மக்கள் கட்சியினா் உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.

இதில், அக்கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலாளா் சரவணபெருமாள், மாவட்டச் செயலாளா் சக்திவேல், நகரச் செயலாளா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு உணவு ப் பொட்டலங்களை வழங்கி, கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com