ராஜபாளையம்: ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் தோப்புப்பட்டி தெருவில் உள்ள கொம்புச்சாமி ஜீவசமாதி கோயிலில் ஜீவசமாதி அடைந்த நாளான சித்ரா பௌா்ணமியான திங்கள்கிழமை அதிகாலையில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து மாலையில் சுவாமிக்கு, 16 வகையான நறுமண பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், அதனைத் தொடா்ந்து தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா் கொம்புச்சாமி, தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.