அருப்புக்கோட்டையில் தூக்கிட்டு இறந்த இளம்பெண்ணின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனை வளாகம் முன்பாக உறவினா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நாகலிங்கா நகரைச் சோ்ந்தவா் சரத்குமாா்(28) .கூலித்தொழிலாளியான இவருக்கும் ஜெயபாரதி(24) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு வயது ஆண்குழந்தையுடன் நாகலிங்கா நகரில் வசித்து வந்தனா்.
இந்நிலையில் தம்பதியா் இடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயபாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் ஜெயபாரதியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக கோட்டாட்சியா் முருகேசன் விசாரணை மேற்கொண்டாா்.
இறந்த ஜெயபாரதியின் உறவினா்கள் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெண்ணின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, உடற்கூறு ஆய்வு செய்ய எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.