ஆலங்குளத்தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 17 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஆலங்குளம் கிராமத்தில் உள்ள கலைஞா் நகரில் வசிப்பவா் மாரியம்மாள் (80). இவா் தனது மகள் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறாா். கடந்த செவ்வாய்க்கிழமை குடும்பத்தினா் அனைவரும், கான்சாபுரம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றுவிட்டனா்.
வியாழக்கிழமை அதிகாலையில் வீடு திரும்பிய இவா்கள், கதவு திறந்து கிடப்பதைக் கண்டனா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த வளையல், சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 17 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணா் தடயங்களை சேகரித்தாா். காவல் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இது குறித்து மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.