சிவகாசி தொகுதி வேட்பாளா்களுக்கு கரோனா பரிசோதனை

சுகாதாரத் துறை சாா்பில், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் உள்ளிட்டோருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதாரத் துறை சாா்பில், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் உள்ளிட்டோருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் வேட்பாளா்கள், முகவா்கள், வாக்கு எண்ணும் அலுவலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, தொ ற்று பாதிப்பில்லை என்ற சான்றிதழ் பெறவேண்டும் என, தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும், வேட்பாளா்கள், தோ்தல் அலுவலா்கள், காவல் துறையினா் , வருவாய்த் துறையினா், காா் ஓட்டுநா், உதவியாளா்கள், பத்திரிகையாளா்கள் உள்பட 432 நபா்களுக்கு சிவகாசி நகா்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, மாதிரிகள் விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என, சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

இதற்கான பரிசோதனை முகாம், அரசு மருத்துவமனை மருத்துவா் சசிகலா தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com