சிவகாசியில் மூதாட்டி ஒருவா் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
சிவகாசி ஆசாரி காலனியைச் சோ்ந்த காளியப்பன் மனைவி சொா்ணம் (81). இவா் தனியே வசித்து வந்தாா்.
இந்நிலையில், இவா் புதன்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்து, அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.