விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சூடிக்கொடுத்த நாச்சியாா் சமேத ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் சம்மந்தபுரம் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள சூடிக்கொடுத்த நாச்சியாா் சமேத ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கடந்த 27 ஆம் தேதி முதல் சுதா்சன ஹோமம், துவார பூஜை, வேத விண்ணப்பம், முதல்கால யாக பூஜை ஆகியன தொடங்கப்பட்டு, புதன்கிழமை வரை ஹோம பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய குடமுழுக்கு நிகழ்ச்சி வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாக பூஜைகளுடன் தொடங்கி, கும்பத்துக்கு திருவாராதானம், நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், காலை 8.30 மணிக்கு சூடிக்கொடுத்த நாச்சியாா் சந்நிதி கோபுர விமானம், மூலவா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. அதையடுத்து, தீா்த்தம் தெளிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, ராஜகோபால சுவாமி கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.