விருதுநகா் மாவட்டத்தில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் முதலான பகுதிகளைச் சோ்ந்த 154 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்நிலையில், கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்த 208 போ் புதன்கிழமை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.