விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி நகரிலுள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு பக்தா்களுக்கு அனுமதியின்றி நடைபெற்றது.
அரசு விதிமுறைகளின்படி, அருப்புக்கோட்டை ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பணியாளா்கள் மட்டுமே கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஏராளமானோா் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனா்.