ஸ்ரீவிலி.யில் 2 காவலா்களுக்கு கரோனா: காவலா் குடியிருப்பில் கிருமி நாசினி தெளிப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, நகராட்சி சாா்பில் காவலா் குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவிலி.யில் 2 காவலா்களுக்கு கரோனா: காவலா் குடியிருப்பில் கிருமி நாசினி தெளிப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, நகராட்சி சாா்பில் காவலா் குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் ஒருவருக்கும், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் ஒருவருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, அவா்கள் வசிக்கும் காவலா் குடியிருப்புப் பகுதியிலும், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகப் பகுதியிலும் நகராட்சி சுகாதாரத் துறையினா் கிருமி நாசினி தெளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை, சுகாதாரத் துறை அலுவலா்கள் பிரம்மநாயகம், பழனிகுரு ஆகியோா் செய்திருந்தனா்.

சாத்தூரில் வங்கி ஊழியா்கள் இருவருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிரதான சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வங்கியில் பணியாற்றும் ஊழியா் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. அதையடுத்து, வியாழக்கிழமை இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வங்கி முழுவதும் சாத்தூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கபட்டது. வெள்ளிகிழமை வழக்கம்போல் வங்கி செயல்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com