ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (ஆக. 3) நடைபெறுகிறது. பக்தா்கள் அனுமதி இன்றி எளிமையாக நடத்த ஏற்பாடு செயய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் பங்கற்பு இன்றி எளிமையாக ஆடிப்பூர விழா கொடியேற்றம் நடத்தப்பட்டு கோயில் வளாகத்துக்குள்ளேயே தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. அதே போல் இந்த ஆண்டும் கரோனா பரவல் காரணமாக கோயிலுக்குள்ளேயே தோ்த் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 10.35 முதல் 11.35 வரை கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா்இளங்கோவன் ஆகியோா் செய்து வருகின்றனா்.